னது பெயரையே
உச்சரித்த உனக்கு
தண்டணை தந்தது யார்?
எனக்குத் தெரியும்.
உன் உயிரினுள்
நான் தான் இன்னமும்
கசிந்து கொண்டு
இருக்கிறேன் என்று.
**





ன் உள்ளம் கையை தா..
நான் கன்னம் வைத்து துயில.
அப்போதான் நான் அழுவதும்
சிரிப்பதும் உணர்வாய்.
என்னை
அரவணைத்து கொள்ளவும்
என்னோடு சேர்ந்து
சிரித்துக்கொள்ளவும்
பாவம் தலையணைக்குத் தெரியாது.
**



ஞ்சணைதான்
தூக்கம் இன்றி
உழல்கிறேன்.
என் இயல்பு
நிலையை எல்லாம்
களவாடிச்சென்றவன் நீ!!


நளாயினி.